வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை


பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்தமானி அறிவித்தல் மூலமாக இந்த ஒழுக்கக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் காலப்பகுதி வரை இந்த ஒழுக்கக் கோவை வலுவுடையதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையாளர்கள் மூவரும் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.