பள்ளத்தில் பாய்ந்தது முச்சக்கரவண்டி


 


(க.கிஷாந்தன்)

 

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா கிளங்கன் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 26.01.2021 அன்று அதிகாலை 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 03 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

 

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.