பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் வெள்ளிக்கிழமை(22) இரவு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது.
குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி கார் என்பவற்றை குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக பயணம் செய்த முச்சக்கரவண்டி பிரதான வீதியினை குறுக்கறுக்கும் போது மோதி சேதப்படுத்தியது.
இவ்விபத்தில் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞனும் காயமடைந்துள்ளனர்.அத்துடன் பிரதான வீதியினால் சென்ற மற்றுமொரு முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Post a Comment
Post a Comment