கரைவலை தோணிகளுக்கு அதிகளவான சூறை வகை மீன்கள்





பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)



அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மற்றும் சாய்ந்தமருது  பகுதியில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  சூறை இன மீன்கள்  வெள்ளிக்கிழமை(22) பிடிக்கப்பட்டன.

சீரற்ற காலநிலை காரணமாக  இப்பகுதியில்  கரைவலை மீன்பிடியானது   மிகவும்  குறைந்த  நிலையில் காணப்பட்ட நிலையில் கரைவலை மீனவர்களுக்கு  இவ் வகை  மீன்கள் அதிகளவில்  பிடிக்கப்பட்டமை காரணமாக  மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர்.குறிப்பாக இச்சூரை இன மீன்கள்  ஆழ்கடல் படகுகளுக்கே  அதிகமாக பிடிபடும் ஆனால்  இன்றைய தினம் கரைவலை தோணிகளுக்கு அதிகமாக பிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தகத்து.
 

மேலும் கொரோனா அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளமை மகிழ்ச்சியை கொடுத்துள்ளதுடன்  மேலதிக மீன்களை வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக   அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை இப் பிரதேசத்தில்  இம்மீன்கள்  கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது .