பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நிறைவு


 


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் – பொலிகண்டி பகுதிக்கு வருகைத் தந்த பெருந்திரளான மக்கள், போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

கடந்த 3ம் திகதி பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கிழக்கு மாகாணம் முழுவதும் பயணித்து, பின்னர் வடக்கு மாகாணத்தில் போராட்டத்தை நிறைவு செய்துள்ளது.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்;கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு, முஸ்லிம்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.

அகிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் வெற்றியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில், பொலிகண்டியில் கல்லொன்றை நாட்டுவதற்கு திட்டமிட்ட போதிலும், குறித்த கல்லை சிலர் திருடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவிக்கின்றார்.

எனினும், போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.