வி.சுகிர்தகுமார் 0777113659
குற்றச் செயல்கள் பிரதேச மட்டத்தில் தடுக்கப்படாவிடின் மாவட்ட தேசிய மட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுவதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொதுமக்களால் கொண்டு செல்ல முடியும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களினுடனான கலந்துரையாடலொன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தலைமை தாங்கி நடாத்தி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் அன்மைக்காலமாக பல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். குறிப்பாக போதைப்பொருள் விற்பனை சூதாட்டம் போன்ற குற்றச் செயற்பாடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. இதனால் மக்களின் வீடுகளிலும் வீதிகளிலும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதுடன் நிம்மதி இழந்தும் காணப்படுகின்றனர். இதற்கு காரணமானவர்கள்; யார். அவர்களை இனங்காணுவதற்கு சிவில்பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பென்ன என்பது தொடர்பாக ஆராயப்படவேண்டும்.
அத்தோடு அவ்வாறானவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த பிரதேச மட்ட பாதுகாப்பு தரப்பினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவி;ல்லையாயின்; மாவட்ட மட்டத்திற்கோ அல்லது தேசிய மட்டத்திற்கோ பொதுமக்கள் அப்பிரச்சினையை கொண்டு செல்ல முடியும்.
இதற்கும் மேலாக இந்த நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கரிசனை செலுத்தி வரும் ஜனாதிபதி பிரதமரின் கவனத்திற்கும் பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த பொலிசார் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் உடன் தங்களுக்கு அறியத்தருமாறும் அதற்கான உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் உள்ளிட்ட பொலிசார் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் சிவில்பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களினுடனான கலந்துரையாடலொன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தலைமை தாங்கி நடாத்தி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் அன்மைக்காலமாக பல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். குறிப்பாக போதைப்பொருள் விற்பனை சூதாட்டம் போன்ற குற்றச் செயற்பாடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. இதனால் மக்களின் வீடுகளிலும் வீதிகளிலும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதுடன் நிம்மதி இழந்தும் காணப்படுகின்றனர். இதற்கு காரணமானவர்கள்; யார். அவர்களை இனங்காணுவதற்கு சிவில்பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பென்ன என்பது தொடர்பாக ஆராயப்படவேண்டும்.
அத்தோடு அவ்வாறானவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த பிரதேச மட்ட பாதுகாப்பு தரப்பினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவி;ல்லையாயின்; மாவட்ட மட்டத்திற்கோ அல்லது தேசிய மட்டத்திற்கோ பொதுமக்கள் அப்பிரச்சினையை கொண்டு செல்ல முடியும்.
இதற்கும் மேலாக இந்த நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கரிசனை செலுத்தி வரும் ஜனாதிபதி பிரதமரின் கவனத்திற்கும் பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த பொலிசார் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் உடன் தங்களுக்கு அறியத்தருமாறும் அதற்கான உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் உள்ளிட்ட பொலிசார் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் சிவில்பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment