WhatsApp #வழக்கு



 #இந்தியா.

மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில், WhatsApp நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. YouTube, Facebook, Twitter, WhatsApp, Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், Amazon, Netflixi உள்ளிட்ட OTT வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு புதிய ஒழுங்கு விதிமுறைகளை, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. தவறான தகவல்களை பரப்பக்கூடிய, முதல் நபர் யார்? என்பதை கண்டறிந்து, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதாகும். 

               அரசோ, நீதிமன்றமோ, தனிநபரின் தகவல்களை கேட்கும்பொழுது, வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் அதில் அடங்கும். இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள, சமூக வலைத்தளங்களுக்கு வழங்கப்பட்ட, மூன்று மாத கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக, WhatsApp நிறுவனம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிமுறைகள், தனிநபர் ரகசிய பாதுகாப்பு உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக, WhatsApp நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், Facebook நிர்வாகமும், அரசின் சில விதிமுறைகளில் உடன்படுவதாகவும், ஆனால், சில விதிமுறைகளை ஏற்பது குறித்து, ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.