ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க உணவு


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை கட்டுப்பாட்டினால்    பாதிக்கப்பட்டுள்ள  யாசகர்கள் மீனவர்கள் சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கு   ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க   உணவு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் மீனவர்கள் சுயதொழில் தொழிலாளர்கள்  பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை(6)    அம்பாறை மாவட்ட  ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க  கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தருமான ஏ.எல் றபீக்  பயணத்தடையினால் நிர்க்கதியான     இப்பகுதியிலுள்ள 75 மீனவர்கள் சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள்  யாசகர்களுக்கு  உணவுகளை  வழங்கி வைத்தார்.

இந்த மனிதாபிமானப் பணியினை  தனது சபை அமர்வில் வழங்கப்படும் மாதாந்த  கொடுப்பனவில்  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.