டெங்கு தடுப்பு உதவியாளர் நிரந்திர நியமனம் கோரி போராட்டம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




டெங்கு தடுப்பு உதவியாளர் நிரந்திர நியமனம் கோரி  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் ஒன்று கூடிய உதவியாளர்கள் தம்மை நிரந்திர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை(14) மதியம்   குறித்த போராட்டம்  கொரோனா சுகாதார விதிமுறைக்கமைய  சமூக இடைவெளியுடன்  ஆரம்பமானதுடன்   கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகள் மூன்றரை  வருடங்களாக எந்த தரப்பினரும் கருத்தில் எடுக்கவில்லை எனவும் தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டமானது தொடர்ந்து முன்னெடுக்க முயன்றால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் கூறினர்.