றுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
காங்கேயனோடையில் உள்ள வெற்றுக் காணியொன்றில் களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்தே இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த காணிக்குள் குறித்த துப்பாக்கியை வீசி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment