ரணில் விக்கிரமசிங்க சிறை மருத்துவமனையில்



 


விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறை மருத்துவமனையில் அனுமதி!


கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுரவால் நேற்று (22) ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.