சூடான் நிலச்சரிவில் குறைந்தது 370 பேர் பலி - ஒரு கிராமமே சிக்கிய பரிதாபம்





(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

மேற்கு சூடானில் உள்ள மர்ரா மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 370 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஐ.நாவின் மனிதநேய உதவிகளை சூடானுக்காக ஒருங்கிணைக்கும் அண்டோய்ன் ஜெரார்ட், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அணுகுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் பாதிப்புகள் எவ்வளவு, உயிரிழப்புகள் எத்தனை என்று கணக்கிட சிரமமாக இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக, 1,000 பேர் நிலச்சரிவில் உயிரிழந்ததாக சூடான் லிபரேஷன் ஆர்மி என்கிற கிளர்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.