நடப்பாண்டில் கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 98 ஆயிரத்து 987 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 519,816 ஆகும்.
மேலும், ஜெர்மனியிலிருந்து 143,999 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 178,743 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 207,510 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 105,601 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 130,452 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 107,353 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 25 நாட்களில் 195,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment