"1 million Volunteers" தேசிய வேலைத்திட்டம்



 ( வி.ரி.சகாதேவராஜா)


தேசிய இளைஞர்  சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் பத்து லட்சம் தொண்டர்கள் "1 million Volunteers" வேலைத்திட்டத்திற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகதேர்வானது. மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து Online முறைமை ஊடாக விண்ணப்பித்திருந்த 30இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இந்த நேர்முகத்தேர்வில் பங்குபற்றியிருந்ததுடன், இளைஞர் சேவை உத்தியோகத்தர்  த. சபியதாஸ் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் மன்ற தலைவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.