நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் வலியுறுத்தினார்.
காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 12ஆவது மாதாந்த சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (16) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்றபோது அங்கு நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை கண்கூடாகக் கண்டேன். ஐந்து வைத்தியர் பதவிகளுக்கான அனுமதி இருந்த போதிலும் தற்போது மூன்று வைத்தியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் (OPD) அதிகளவான நோயாளர்கள் வைத்தியர்களின் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
நானும் எனது குடும்ப உறுப்பினருக்கான சிகிச்சைக்காகச் சென்றபோது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் வைத்தியசாலைப் பொறுப்பு மருத்துவ அதிகாரியிடம் விசாரித்தபோது வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிந்து கொண்டேன்.
சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமன்றி மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வைத்தியசாலையை நம்பியே சிகிச்சை பெற்று வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பொத்துவில் பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் வருவதை காண முடிகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத பலர் அரச வைத்தியசாலைகளை நம்பி வருகின்றனர். இந்நிலையில் அரச வைத்தியசாலைகளிலேயே வைத்தியர்கள் இல்லாத நிலை மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் கடமையைப் பொறுப்பேற்கும் முன்னரே சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் மக்களின் சுகாதார சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
எனவே, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் வலியுறுத்தினார்.
காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 12ஆவது மாதாந்த சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (16) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்றபோது அங்கு நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை கண்கூடாகக் கண்டேன். ஐந்து வைத்தியர் பதவிகளுக்கான அனுமதி இருந்த போதிலும் தற்போது மூன்று வைத்தியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் (OPD) அதிகளவான நோயாளர்கள் வைத்தியர்களின் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
நானும் எனது குடும்ப உறுப்பினருக்கான சிகிச்சைக்காகச் சென்றபோது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் வைத்தியசாலைப் பொறுப்பு மருத்துவ அதிகாரியிடம் விசாரித்தபோது வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிந்து கொண்டேன்.
சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமன்றி மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வைத்தியசாலையை நம்பியே சிகிச்சை பெற்று வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பொத்துவில் பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் வருவதை காண முடிகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத பலர் அரச வைத்தியசாலைகளை நம்பி வருகின்றனர். இந்நிலையில் அரச வைத்தியசாலைகளிலேயே வைத்தியர்கள் இல்லாத நிலை மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் கடமையைப் பொறுப்பேற்கும் முன்னரே சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் மக்களின் சுகாதார சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
எனவே, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Post a Comment
Post a Comment