சு.கவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி இன்று இரவு 07.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது