ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்தியப் பிரதமர் ட்விட்டர் ஊடாக பிறந்த நாள் வாழ்த்து



Warm birthday greetings to the President of Sri Lanka, . May Almighty bless him with a long life and good health.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 65 ஆவது அகவையில் இன்று தடம் பதித்துள்ளார்.
1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கம்பஹா யாகோட இல் பிறந்து           பொலன்னறுவையில் விவசாயக் குடும்பத்தில்   வளர்ந்த           மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார்.
1989 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த அவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கீழ், பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்ததுடன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்கட்சி கூட்டணியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கினார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் போட்டியிட்டு இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவானார்.
இதேவேளை, 65 ஆவது அகவையில் தடம்பதித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலனுடன் வாழ பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் தமது வாழ்த்துப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளா