(காரைதீவு நிருபர் சகா)
தங்கச்சங்கிலியை விற்று கைத்தொலைபேசி வாங்கச் சென்றதாக கூறப்படும் 17வயது இளைஞனைக் கடந்த மூன்று தினங்களாகக் காணவில்லை என கல்முனை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச்சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞரே இவ்விதம் காணாமல்போனவராவார்.
கடந்த சனிக்கிழமை காலை 8மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லையெனவும் உறவினர் வீடுகளில் தேடியபோதும் அவர் காணப்படவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

