அண்ணன் தம்பி சண்டை கொலையில்



பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியதையடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது மூத்த சகோதரனால் இளைய சகோதரன் கொலை செய்யப்பட்டுள்ளார். 

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலை செய்த சந்தேகநபரை கைது செய்யதுள்ள பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்