சட்டத்தை மதிக்காத படகுகளின் அனுமதி இரத்து



கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் வழிக்காட்டுதலை புறக்கணித்து, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகளின் அனுமதிப்பத்திரத்தை தடை செய்யுமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர, கடற்றொழில் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.