கையளிப்பு



87 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (05) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையில், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன. 

பொலன்னறுவை மாவட்டத்தில் 47 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும் 65 கொடை பத்திரங்களும் வழங்குவதை அடையாளப்படுத்தும் முகமாக, ஜனாதிபதியினால் 10 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.