ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன், மாத்தறை - மடிஹ பிரதேச ஹோட்டல் அறையொன்றில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டார்.
மாத்தறை, பம்புரண பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட யசசிரு திசர குமார கலப்பத்தி (வயது 24) என்ற இளம் வர்த்தகரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தியின் புதல்வரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், தென்மாகாண சபை உறுப்பினர் சத்துர கலப்பத்தியின் இளைய சகோதரருமாவார்.
உயிரிழந்த யசசிரு, நேற்று (13) இரவு முழுவதும் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


Post a Comment
Post a Comment