குகுலே கங்கையின் வான் கதவு திறப்பு : அயல்பிரதேச மக்கள் அவதானம்




அகலவத்தை பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புளத்சிங்கள, பதுரலிய, பலிந்தநுவர, அகலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.