மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட இருவர் கைது




புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பணக் கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுனரையும் பாதுகாவலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.