சிலர் முன்வைத்த 30 கோரிக்கைகளில் அரைவாசி பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது


(க.கிஷாந்தன்)
எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரித்துள்ளார்.
10.08.2019 சனிக்கிழமை பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நிர்மாணிக்கபட்ட 35 தனி வீட்டுத்திட்டத்தினை கொண்ட ஒ.ஏ.இராமையா புரத்தினை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று காலை பத்திரிக்கை ஒன்றில் செய்தி ஒன்றினை வாசித்தேன். அதில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். முறையாக வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஒரு அறிக்கை விட்டிருந்தார். அவருக்கு நான் ஒன்றை கூறிகொள்ள ஆசைபடுகிறேன். நான் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி காணியினை பெற்று தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் ஊடாக அறிக்கையினை பெற்று அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த தனி வீட்டுத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்.
நாங்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை முறையில்லாமல் அமைக்கவில்லை இவர்கள் அனைவருக்கும் நான் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வது பொருத்து கொள்ள முடியவில்லை.