அழகுகலை நிலைய முகாமையாளர் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்


கொம்பனித் தெரு, செபல் வீதியில் அமைந்துள்ள அழகுகலை நிலையத்தின் முகாமையாளர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்து சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரும் இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று (12) அதிகாலை குறித்த பகுதிக்கு தனது காதலியுடன் வேனில் வந்து இறங்கிய வேளை, குறித்த 5 இளைஞர்களும் அவர்களை நோக்கி கேலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்கம் இறுதியில் கைகலப்பில் சென்றடைந்துள்ளது. 

முத்தையா வீதி பகுதியில் அழகுகலை நிலையத்தின் முகாமையாளர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு வயது 47 எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 5 இளைஞர்களையும் விமானப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 5 பேரும் 17 முதல் 24 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.