புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா காலமானார்


 


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட டாக்டர் சாந்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.