அம்பாரை மாவட்டத்தை ஊடறுத்த 17 யானைகள்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு  , பகுதியை தினமும்  மாலை யானை கூட்டம் ஒன்று   ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

இன்று(14)  திடிரென அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியின் ஊடாக நிந்தவூர் மற்றும் காரைதீவு   பகுதியின்  வீதியின் ஒரு மருங்கில் குறித்த யானைகள் உலா வருகின்றன.

சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 17 க்கும் அதிகமான  யானைகள் அப்பகுதியில்  உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகை தந்துள்ளன.

தினமும்  அப்பகுதிக்கு வரும்  யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன்  இவ்வாறு வயல்வெளிகளை  நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர்.மேலும்   இப் பிரதேசத்தில்  தினந்தோறும் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும் காட்டில் உள்ள யானைகள் வெளிவந்த நிலையில்  அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.