ETF அலுவலகத்திற்கும் பூட்டு..!


 



நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.  

அதன்பிரகாரம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் விண்ணப்பங்களை தபால் ஊடாகவோ அல்லது அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டியிலோ இடுமாறு குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் டீ.ஜீ.ஜீ.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


- kayal