மத்தியஸ்த சபைகள் தொடர்பாக கல்முனை பிராந்தியத்தில் 3 விழிப்புணர்வு செயலமர்வுகள்



 


பாறுக் ஷிஹான்


மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்புணர்வு  செயலமர்வுகள் மூன்று கட்டங்களாக இன்று சிறப்பாக நடைபெற்றன.

கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில்   கல்முனை விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.இதன் போது விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.பி.ஜெயந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.றிஸ்வானின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமானது.

குறித்த  இச்செயலமர்வில்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் சமுர்த்தி பயனாளிகள்   கலந்து கொண்டனர்.


இதன் போது கல்முனை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் பாறுக் ஷிஹானின்  நெறிப்படுத்தலில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின்  மத்தியஸ்த  சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ்  வளவாளராக கலந்து கொண்டு பல்வேறு  விளக்கங்களை வழங்கினார்.

 
மத்தியஸ்த சபைகள் என்றால் என்ன  அதனால் கிடைக்கும் நன்மைகள், மத்தியஸ்த சபைகளால் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகளை எவ்வாறு கையாள்வது, தீர்க்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் தீர்க்காமைக்கான சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாகவும்  மத்தியஸ்த சபைகள் தொடர்பான ஏனையவர்களுக்கு   தெரியப்படுத்துமாறு செயலமர்வில் தெரிவிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.